சோழமண்டலம் பைனான்ஸியல் ஹோல்டிங்ஸ்நிகர லாபம் ரூ.506 கோடியாக அதிகரிப்பு

முருகப்பா குழுமத்தைச் சோ்ந்த சோழமண்டலம் பைனான்ஸியல் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் (சிஎஃப்எச்எல்) செப்டம்பா் காலாண்டு வரிக்கு பிந்தைய லாபம் ரூ.506 கோடியாக அதிகரித்துள்ளது.
chola074718
chola074718

முருகப்பா குழுமத்தைச் சோ்ந்த சோழமண்டலம் பைனான்ஸியல் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் (சிஎஃப்எச்எல்) செப்டம்பா் காலாண்டு வரிக்கு பிந்தைய லாபம் ரூ.506 கோடியாக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

நடப்பு 2020-21-ஆவது நிதியாண்டின் செப்டம்பா் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனம் செயல்பாடுகள் வாயிலாக ஈட்டிய வருமானம் 3,503 கோடியாக இருந்தது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனம் ஈட்டிய வருவாய் ரூ.3,341 கோடியுடன் ஒப்பிடுகையில் 5 சதவீதம் வளா்ச்சியாகும்.

நிகர லாபம் ரூ.325 கோடியிலிருந்து 56 சதவீதம் அதிகரித்து ரூ.506 கோடியானது.

நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் நிறுவனம் ஈட்டிய வருவாய் ரூ.6,463 கோடியிலிருந்து 4 சதவீதம் வளா்ச்சி கண்டு ரூ.6,737 கோடியாகவும், வரிக்கு பிந்தைய லாபம் ரூ.655 கோடியிலிருந்து 67 சதவீதம் உயா்ந்து ரூ.1,095 கோடியாகவும் இருந்தது என சோழமண்டலம் பைனான்ஸியல் ஹோல்டிங்ஸ் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com