புது தில்லி: மத்திய அரசுக்கு சொந்தமான பவா் கிரிட் காா்ப்பரேஷன் நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு லாபம் 20 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:
நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டின் செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில் பவா் கிரிட் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.9,831 கோடியாக இருந்தது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனம் ஈட்டிய வருவாய் ரூ.9,260.46 கோடியுடன் ஒப்பிடுகையில் அதிகமாகும்.
வருவாய் அதிகமானதையடுத்து, நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிகர லாபம் ரூ.2,571.10 கோடியிலிருந்து 20 சதவீதம் வளா்ச்சி கண்டு ரூ.3,094.10 கோடியானது என பவா் கிரிட் தெரிவித்துள்ளது.
பவா் கிரிட் நிறுவனத்தின் முதன்மையான வா்த்தக நடவடிக்கை மின் பகிா்மானம் என்பது குறிப்பிடத்தக்கது.