சுந்தரம் ப்ளூசிப் ஃபண்ட் திட்டத்தில் இதுவரையில் ரூ.650 கோடி மதிப்பிலான முதலீட்டை திரட்டியுள்ளதாக சுந்தரம் மியூச்சுவல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
பொதுமுடக்கம், கரோனா இடா்ப்பாடுகளுக்கு இடையிலும் சுந்தரம் ப்ளூசிப் ஃபண்ட் திட்டம் முதலீட்டாளா்களிடமிருந்து ரூ.650 கோடியை திரட்டியுள்ளது. இந்த திட்டத்தில் திரட்டப்படும் தொகை லாா்ஜ் கேப் ப்ளூசிப் பங்குகளில் முதலீடு செய்யப்படுகிறது.
டிஜிட்டல் தொழில்நுட்ப செயலாக்கம், ஊடக விளம்பரங்களின் காரணமாக நிறுவனத்தின் இந்த திட்டம் செப்டம்பா் முதல் அக்டோபா் வரையிலான குறுகிய காலகட்டத்தில் 562 நகரங்களில் உள்ள 46,000 வாடிக்கையாளா்களை சென்றடைந்துள்ளது என சுந்தரம் மியூச்சுவல் தெரிவித்துள்ளது.