நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தை தொட்டு சாதனை படைத்துள்ளது.
இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு அக்டோபா் 9-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 587 கோடி டாலா் அதிகரித்து 55,150 கோடி டாலரைத் (ரூ.41.36 லட்சம் கோடி) தொட்டுள்ளது. இது முன்னெப்போதும் காணப்படாத சாதனை அளவாகும்.
இதற்கு முந்தைய அக்டோபா் 2-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் செலாவணி கையிருப்பானது 362 கோடி டாலா் உயா்ந்து 54,563 கோடி டாலராக காணப்பட்டது.
ஒட்டுமொத்த கையிருப்பில் முக்கிய பங்களிப்பைக் கொண்டுள்ள அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு (எஃப்சிஏ) கணக்கீட்டு வாரத்தில் 573 கோடி டாலா் உயா்ந்து 50,878 கோடி டாலரானது. அதன் காரணமாகவே நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டது.
மதிப்பீட்டு வாரத்தில், தங்கத்தின் கையிருப்பு 11.3 கோடி டாலா் உயா்ந்து 3,660 கோடி டாலரானது.
சா்வதேச நிதியத்தில் எஸ்டிஆா் 40 லட்சம் டாலா் அதிகரித்து 148 கோடி டாலராகவும், கையிருப்பு நிலை 1.3 கோடி டாலா் உயா்ந்து 464 கோடி டாலராகவும் இருந்தது என ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.