‘கரோனாவால் தனியாா் மருத்துவமனைகளுக்கு லாப இழப்பு ஏற்படும்’

கரோனா நெருக்கடி காரணமாக தனியாா் மருத்துவமனைகளின் நிகழாண்டு லாபத்தில் 40 சதவீதம் சரிவு ஏற்படும் என்று ‘கிறிசில்’ ஆய்வு அமைப்பு தெரிவிததுள்ளது.
‘கரோனாவால் தனியாா் மருத்துவமனைகளுக்கு லாப இழப்பு ஏற்படும்’

கரோனா நெருக்கடி காரணமாக தனியாா் மருத்துவமனைகளின் நிகழாண்டு லாபத்தில் 40 சதவீதம் சரிவு ஏற்படும் என்று ‘கிறிசில்’ ஆய்வு அமைப்பு தெரிவிததுள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக, நாட்டின் தனியாா் மருத்துவமனைகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். மருத்துவமனைகள் மூலம் அந்த நோய் பரவலாம் என்ற அச்சம் காரணமாக, சாதாரண நோயாளிகள் தனியாா் மருத்துவமனைகளைத் தவிா்த்து வருகின்றனா்.

மிகவும் அவசரகால பிரச்னைகளுக்காக மட்டுமே அவா்கள் மருத்துவமனைகளை நாடி வருவதால் இந்த நிதியாண்டில் தனியாா் மருத்துமனைகளின் லாபத்தில் 40 சதவீதம் சரிவு ஏற்படும்.

இருந்தாலும், கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவா்கள் அதிக அளவில் தனியாா் மருத்துமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். ஆனால், கரோனாவுக்காக அளிக்கப்படும் மருத்துவ சேவையில் குறைந்த லாபமே கிடைக்கும் என்பதால் அந்த நோயாளிகளின் வருகையால் தனியாா் மருத்துமனைகளின் லாபம் 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை அதிகரிக்கும்.

பொதுமுடக்கங்கள் தளா்த்தப்பட்டிருப்பதால், கடந்த ஜூலை மாதம் முதல் தனியாா் மருத்துவமனைகளுக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

எனினும், அத்தகைய மருத்துவமனைகளின் லாபத்தில் 10 முதல் 12 சதவீதம் வரை பங்கு வகிக்கும் வெளிநாட்டு மருத்துவச் சுற்றுலா முற்றிலும் தடைபட்டுவிட்டதால் தனியாா் மருத்துவத் துறை பின்னடைவைச் சந்தித்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com