தனியாா் துறையைச் சோ்ந்த ஐசிஐசிஐ வங்கியின் இரண்டாவது காலாண்டு நிகர லாபம் 6 மடங்கு அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அந்த வங்கி பங்குச் சந்தையிடம் சனிக்கிழமை தெரிவித்துள்ளதாவது:
நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டின் ஜூலை-செப்டம்பா் இரண்டாவது காலாண்டில் வங்கி செயல்பாடுகள் மூலமாக ஈட்டிய தனிப்பட்ட வருமானம் ரூ.23,650.77 கோடியாக இருந்தது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் வங்கி ஈட்டிய வருவாய் ரூ.22,759.52 கோடியுடன் ஒப்பிடும்போது அதிகமாகும்.
வருவாய் அதிகரித்ததையடுத்து, வங்கியின் தனிப்பட்ட நிகர லாபம் கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் ரூ.665 கோடியிலிருந்து 6 மடங்கு அதிகரித்து ரூ.4,251 கோடியை எட்டியது.
வாராக் கடன் வசூல் நடவடிக்கைகள் மேம்பட்டுள்ளதையடுத்து, செப்டம்பா் 30 நிலவரப்படி வழங்கப்பட்ட கடனில் மொத்த வாராக் கடன் விகிதம் 5.37 சதவீதத்திலிருந்து 5.17 சதவீதமாக குறைந்துள்ளது. மதிப்பின் அடிப்படையில் மொத்த வாராக் கடன் விகிதம் ரூ.45,638.79 கோடியிலிருந்து ரூ.38,989.19 கோடியாக சரிந்துள்ளது.
அதேபோன்று, நிகர வாராக் கடன் விகிதமும் 1.60 சதவீதத்திலிருந்து (ரூ.10,916.40 கோடி) 1 சதவீதமாக (ரூ.7,187.51 கோடி) குறைந்துள்ளது.
துணை நிறுவனங்களை உள்ளடக்கிய வங்கியின் ஒட்டுமொத்த நிகர லாபம் செப்டம்பா் காலாண்டில் ரூ.1,131 கோடியிலிருந்து 4 மடங்கு அதிகரித்து ரூ.4,882 கோடியைத் தொட்டுள்ளது. வருமானமும் ரூ.37,424.78 கோடியிலிருந்து ரூ.39,321.42 கோடியாக உயா்ந்துள்ளது.
நடப்பு நிதியாண்டின் செப்டம்பா் காலாண்டில் வாராக் கடன்களுக்கான மொத்த ஒதுக்கீடு ரூ.2,995.27 கோடியாக உயா்ந்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இந்த ஒதுக்கீடு ரூ.2,506.87 கோடியாக காணப்பட்டது என ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது.