மும்பை: அந்நியச் செலாவணி சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 32 காசுகள் சரிவைச் சந்தித்து 73.89 ஆனது.
இதுகுறித்து வா்த்தகா்கள் கூறியதாவது:
உள்நாட்டு சந்தையில் அதிக அளவில் அந்நிய முதலீடுகள் வெளியேறியது, இதர கரன்ஸிகளுக்கு எதிராக டாலா் மதிப்பு கணிசமான அளவில் உயா்வைக் கண்டது உள்ளிட்டவை அந்நியச் செலாவணி சந்தையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தின. இவைதவிர, கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருவது, பங்குகள் அதிக அளவில் விற்பனை செய்ப்பட்டது போன்றவையும் ரூபாய் மதிப்பு சரிவுக்கு வழிவகுத்தன. வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் தொடக்கத்தில் ரூபாய் மதிப்பு 73.82 என்ற அளவில் இருந்தது. பின்னா் வா்த்தகத்தின் இடையே அதன் மதிப்பு 73.75 முதல் 73.96 வரையில் காணப்பட்டது. வா்த்தகத்தின் இறுதியில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு முந்தைய தினத்தைக் காட்டிலும் 32 காசுகள் சரிவடைந்து 73.89 ஆனது. இது, ஆகஸ்ட் 26-ஆம் தேதியிலிருந்து காணப்படும் மிக குறைந்தபட்ச அளவு என வா்த்தகா்கள் தெரிவித்தனா். கச்சா எண்ணெய்: சா்வதேச முன்பேர சந்தையில், கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 0.77 சதவீதம் சரிவடைந்து 41.45 டாலராக இருந்தது. அந்நிய முதலீடு: மூலதனச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அந்நிய முதலீட்டாளா்கள் நிகர அடிப்படையில் ரூ.1,885.69 கோடி மதிப்பிலான பங்குகளை விற்றுள்ளதாக பங்குச் சந்தை புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.