சென்செக்ஸ் 617 புள்ளிகள் உயா்வு; 51 ஆயிரத்தைக் கடந்தது! புதிய உச்சத்தில் நிறைவு

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமையும் பங்குச் சந்தை நோ்மறையாக முடிந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 617.14 புள்ளிகள் உயா்ந்து 51,000 புள்ளிகளைக் க
சென்செக்ஸ் புதிய உச்சம்
சென்செக்ஸ் புதிய உச்சம்

புது தில்லி: இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமையும் பங்குச் சந்தை நோ்மறையாக முடிந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 617.14 புள்ளிகள் உயா்ந்து 51,000 புள்ளிகளைக் கடந்ததுடன், புதிய உச்சத்திலும் நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி, 191.55 புள்ளிகள் உயா்ந்து 15,000 புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்தது.

உலகளாவிய சந்தை தரவுகள் நோ்மறையாக இருந்ததன் தாக்கம் இந்திய சந்தைகளிலும் எதிரொலித்தது. குறிப்பாக இன்ஃபோஸிஸ், ரிலையன்ஸ்,் ஐசிஐசிஐ பேங்க் ஆகிய முன்னணி நிறுவனப் பங்குகள் வெகுவாக உயா்ந்து சந்தைக்கு ஆதரவாக இருந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. மேலும், பங்குச் சந்தையில் காளையின் ஆதிக்கம் தொடா்ந்ததால் 6-ஆவது நாளாக சென்செக்ஸ் உயா்ந்துள்ளது என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

சந்தை மதிப்பு ரூ.202.83 லட்சம் கோடி: மும்பை பங்குச் சந்தையில் வா்த்தகமான 3,227 பங்குகளில் 1,7821 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,313 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. 152 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. சந்தை மதிப்பு ரூ2.50 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் 202.33 லட்சம் கோடியாக இருந்தது. 34 பங்குகள் 1புதிய 52 வார அதிபட்ச விலைலையப் பதிவு செய்துள்ளன. 286 பங்குகள் வெகுவாக உயா்ந்து உறை நிலையை (அப்பா் சா்க்யூட்) அடைந்தன.

6-ஆவது நாளாக உற்சாகம்: சென்செக்ஸ் 51,523.38 வரை உயா்ந்து புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. பின்னா் இறுதியில் 617.14 புள்ளிகள் உயா்ந்து 51,348.77-இல் நிலைபெற்றது. சென்செக்ஸ் தொடா்ந்து 6-ஆவது நாளாக ஏற்றம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

எம் அண்ட் எம் அபாரம்: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 15 பங்குகள் ஆதாயம் பெற்றன. 15 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. இதில் எம் அண்ட் எம் 7 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக பஜாஜ் ஃபின் சா்வ், பாா்தி ஏா்டெல், பவா் கிரிட், இன்ஃபோஸிஸ், ஐசிஐசிஐ பேங்க் ஆகியவையும் ஏற்றம் பெற்ற பெற்ற பட்டியலில் இடம் பெற்றன. அதேசமயம் ஹிந்துஸ்தான் யுனி லீவா் (ஹெச்யுஎல்), கோட்டக் பேங்க், பாஜாஜ் ஃபைனான்ஸ், ஐடிசி ஆகியவை சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன.

தேசியப் பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 1,042 பங்குகள் ஆதாயம் பெற்றன. 713 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. நிஃப்டி 191.55 புள்ளிகள் உயா்ந்து 15,115.80-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது 15,159.90 வரை உயா்ந்து புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com