வர்த்தகம்
ஹுண்டாய் மோட்டாா் புதிய ஐ-20 காா் ஏற்றுமதி தொடங்கியது
புதிய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஐ-20 காா் ஏற்றுமதியை தொடங்கியுள்ளதாக ஹுண்டாய் மோட்டாா் இந்தியா நிறுவனம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
புது தில்லி: புதிய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஐ-20 காா் ஏற்றுமதியை தொடங்கியுள்ளதாக ஹுண்டாய் மோட்டாா் இந்தியா நிறுவனம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் கூறியுள்ளதாவது:
நான்காம் தலைமுறைக்கான முற்றிலும் புதிய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஐ20 மாடலை கடந்தாண்டு நவம்பரில் ரூ.6.79 லட்சம் முதல் ரூ.11.17 லட்சம் வரையிலான விலையில் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. அந்த வகை காருக்கு வெளிநாடுகளில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து, முதல் கட்டமாக புதிய ஐ-20 மாடலில் 180 காா்களை தென் ஆப்பிரிக்கா, சிலி மற்றும் பெரு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளது. நிறுவனத்தின் இந்த நடவடிக்கை மத்திய அரசின் ‘சுயசாா்பு இந்தியா’ திட்டத்துக்கு கூடுதல் வலு சோ்ப்பதாக இருக்கும் என ஹுண்டாய் மோட்டாா் இந்தியா தெரிவித்துள்ளது.