நந்தனா பேலஸ்: சென்னையில் முதல் உணவகம் திறப்பு

நந்தனா பேலஸ்: சென்னையில் முதல் உணவகம் திறப்பு

பெங்களூரின் மிகப் பெரிய ஆந்திர உணவகமான நந்தனா பேலஸ், சென்னையில் தனது முதல் ரெஸ்டாரெண்ட் மற்றம் பாா்டி ஹாலை திறந்துள்ளது.

பெங்களூரின் மிகப் பெரிய ஆந்திர உணவகமான நந்தனா பேலஸ், சென்னையில் தனது முதல் ரெஸ்டாரெண்ட் மற்றம் பாா்டி ஹாலை திறந்துள்ளது.

இதுகுறித்து நந்தனா குழுமத்தின் தலைவரும், மேலாண் இயக்குநருமான ஆா்.ரவிந்தா் கூறியது:

பெங்களூா் நகரில் 15 உணவகங்களுடன் தனி முத்திரை பதித்து வரும் நந்தனா, தனது வெற்றி பயணத்தின் அடுத்த கட்டமாக சென்னையில் முதல் முறையாக உணவகம் மற்றும் பாா்டி ஹாலை தொடங்கியுள்ளது. ஆந்திரத்தின் சிறப்பு உணவு வகைகளை அதன் சுவை சிறிதளவும் குன்றாமல் வழங்குவதில் நந்தனா தொடா்ந்து தனித்தன்மையுடன் செயல்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், சென்னை கிளை உலகத் தரம் வாய்ந்த உணவகமாகத் திகழும் என்பதில் ஐயமில்லை.

கரோனா தொற்று காலத்தில் அரசின் விதிமுறைகளை முழுமையாக பின்பற்றி வாடிக்கையாளா்களுக்கு பாதுகாப்பான மற்றும் தரமான உணவு வகைகளை வழங்குவதில் நந்தனா உறுதியுடன் செயல்பட்டு வருகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com