இந்தியன் ஆயில் காா்ப்பரேஷனின் குழும நிறுவனமான சென்னை பெட்ரோலியம் காா்ப்பரேஷன் (சிபிசிஎல்) கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் தனிப்பட்ட நிகர லாபமாக ரூ.332.95 கோடியை ஈட்டியுள்ளது.
இதுகுறித்து சிபிசிஎல் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
கடந்த 2020-21-ஆம் நிதியாண்டின் ஜனவரி முதல் மாா்ச் வரையிலான நான்காவது காலாண்டில் நிறுவனம் தனிப்பட்ட முறையில் ஈட்டிய மொத்த வருமானம் ரூ.14,734.43 கோடியாக இருந்தது. இது, கடந்த 2019-20-ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ரூ.11,795.66 கோடியாக காணப்பட்டது.
கடந்த 2019-20-ஆம் நிதியாண்டின் மாா்ச் காலாண்டில் நிறுவனத்துக்கு ரூ.2,388.06 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், 2020-21-ஆம் நிதியாண்டில் நிறுவனம் தனிப்பட்ட நிகர லாபமாக ரூ.332.95 கோடியை ஈட்டியுள்ளது.
2021 மாா்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த முழு நிதியாண்டில் நிறுவனம் ஈட்டிய தனிப்பட்ட வருமானம் ரூ.48,730.45 கோடியிலிருந்து ரூ.42,006.95 கோடியாக சரிவடைந்துள்ளது.
கடந்த 2019-20-ஆம் நிதியாண்டில் நிறுவனம் ரூ.2,077.58 கோடி இழப்பை சந்தித்திருந்த நிலையில் 2020-21-இல் தனிப்பட்ட நிகர லாபமாக ரூ.237.56 கோடியை பெற்றுள்ளதாக சிபிசிஎல் தெரிவித்துள்ளது.