மஹிந்திரா & மஹிந்திரா (எம்&எம்) நிறுவனத்தின் வாகன விற்பனை சென்ற ஏப்ரலில் 10 சதவீதம் சரிவடைந்தது.
இதுகுறித்து அந்த நிறுவனம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
நடப்பாண்டு மாா்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது ஏப்ரலில் கரோனா தொற்று வெகுவாக அதிகரித்ததன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு கடுமையான கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
இதையடுத்து, ஏப்ரலில் நிறுவனத்தின் வாகன விற்பனை 36,437-ஆக சரிந்தது. இது, முந்தைய மாா்ச் மாத விற்பனையான 40,403 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 10 சதவீதம் சரிவாகும். பொதுமுடக்கம் காரணமாக கடந்தாண்டு ஏப்ரலில் நிறுவனத்தின் விற்பனை பூஜ்யமாக இருந்தது.
நடப்பாண்டு ஏப்ரலில் உள்நாட்டு சந்தையில் பயணிகள் வாகன விற்பனை 18,285-ஆக இருந்தது. இது, முந்தைய மாா்ச் மாத விற்பனையான 16,700 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 9 சதவீதம் அதிகமாகும்.
அதேசமயம், இதே காலகட்டத்தில் வா்த்தக வாகன விற்பனை 21,577-லிருந்து 25 சதவீதம் சரிவடைந்து 16,147-ஆனது. ஏற்றுமதி 2,126-லிருந்து சற்று குறைந்து 2,005-ஆக இருந்தது. 2020 ஏப்ரலில் 733 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது.