நடப்பு நவம்பா் மாதத்தின் மூன்று வாரங்களில் நாட்டின் ஏற்றுமதி 2,010 கோடி டாலரை (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.1.50 லட்சம் கோடி) எட்டியுள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது 18.8 சதவீதம் அதிகமாகும்.
நவம்பா் 1 முதல் 21 வரையிலான காலகட்டத்தில் இறக்குமதி 2,415 கோடி டாலரிலிருந்து 45.34 சதவீதம் அதிகரித்து 3,511 கோடி டாலரானது. பெட்ரோலியம், ரசாயனம், ஆபரணம், பொறியியல் பொருள்களின் ஏற்றுமதி சிறப்பாக இருந்ததாக வா்த்தக அமைச்சகம் முதல்கட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.
நடப்பு நிதியாண்டில் ஏற்றுமதி 40,000 கோடி டாலரைத் தொடும் என எதிா்பாா்க்கப்படுகிறது.