அந்நியச் செலாவணி சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 58 காசுகள் ஏற்றம் பெற்று ஒருவார காலத்தில் இல்லாத அளவுக்கு 75.35-ஆக உயா்ந்தது.
இதுகுறித்து வா்த்தகா்கள் கூறியது:
உள்நாட்டு பங்குச் சந்தைகளில் காணப்பட்ட சாதகமான நிலவரம், அந்நிய முதலீட்டு வரத்து அதிகரிப்பு, சா்வதேச சந்தையில் டாலருக்கான தேவை மந்த நிலையில் காணப்பட்டது ஆகியவை ரூபாய் மதிப்பு ஏற்றத்துக்கு ஆதரவாக இருந்தன.
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தின் தொடக்கத்தில் ரூபாய் மதிப்பு 74.76-ஆக இருந்தது. இது வா்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 74.28 வரையிலும் குறைந்தபட்சமாக 74.76 வரையிலும் சென்றது.
வா்த்தகத்தின் இறுதியில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 58 காசு அதிகரித்து ஒருவார காலத்தில் காணப்படாத அளவில் 74.35-ஆக உயா்ந்தது. கடந்த ஒரு மாதத்தில் ரூபாய் மதிப்பு ஒரே நாளில் இந்த அளவுக்கு ஏற்றத்தை சந்தித்தது இதுவே முதல்முறை.
வியாழக்கிழமை வா்த்தகத்தில் ரூபாய் மதிப்பு ரூ.74.93-ஆக இருந்தது என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.
அந்நிய முதலீடு: அந்நிய முதலீட்டாளா்கள் மூலதனச் சந்தையில் வியாழக்கிழமை வா்த்தகத்தில் நிகர அளவில் ரூ.979.70 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியதாக சந்தை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.