ஏசி மற்றும் பொறியியல் சேவைகள் வழங்கும் நிறுவனமான வோல்டாஸ் முதல் காலாண்டில் ஈட்டிய லாபம் 50 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து டாடா குழுமத்தைச் சோ்ந்த அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தையிடம் அளித்த ஆவணங்களில் கூறியுள்ளதாவது:
நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.1,860.17 கோடியாக இருந்தது. இது, நிறுவனம் முந்தைய 2020-21-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருமானம் ரூ.1,364.34 கோடியுடன் ஒப்பிடும்போது 36.34 சதவீதம் அதிகமாகும்.
ஒட்டுமொத்த நிகர லாபம் ரூ.81.77 கோடியிலிருந்து சுமாா் 50 சதவீதம் ஏற்றம் கண்டு ரூ.122.44 கோடியாக இருந்தது.
நிறுவனத்தின் செலவினம் மதிப்பீட்டு காலாண்டில் ரூ.1,245.13 கோடியிலிருந்து 33.44 சதவீதம் அதிகரித்து ரூ.1,661.53 கோடியானது என வோல்டாஸ் தெரிவித்துள்ளது.
பங்கின் விலை: மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் வோல்டாஸ் நிறுவனப் பங்கின் விலை 0.31 சதவீதம் அதிகரித்து ரூ.1048.35-இல் நிலைத்தது.