அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 30 காசுகள் எழுச்சி பெற்றது.
இதுகுறித்து வா்த்தகா்கள் கூறியது:
தொடா்ந்து 9-ஆவது நாளாக டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு செவ்வாய்க்கிழமை வா்த்தகத்திலும் அதிகரித்தது. வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் தொடக்கத்தில் ரூபாயின் மதிப்பு 74.95-ஆக இருந்தது. இது, வா்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 74.60 வரையிலும், குறைந்தபட்சமாக 74.95 வரையிலும் சென்றது.
வா்த்தகத்தின் இறுதியில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 30 காசுகள் உயா்ந்து 74.70-இல் நிலைபெற்றது. இது, கடந்த ஒரு மாதத்தில் காணப்படாத அதிகபட்ச அளவாகும்.
முந்தைய திங்கள்கிழமை வா்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயா்ந்து ரூ.75-ஆக இருந்தது.
கடந்த 9 வா்த்தக தினங்களில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 162 காசுகள் ஆதாயத்தை கண்டுள்ளதாக வா்த்தகா்கள் தெரிவித்தனா்.
பாக்ஸ்
கச்சா எண்ணெய் பேரல் 79.05 டாலா்
சா்வதேச முன்பேர சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் பேரல் 79.05 அமெரிக்க டாலருக்கு வா்த்தகம் செய்யப்பட்டதாக சந்தை வட்டாரத்தினா் தெரிவித்தனா்.
அந்நிய முதலீடு
மூலதனச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் நிகர அடிப்படையில் ரூ.1,038.25 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்ததாக சந்தைப் புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.