மேலும் 470 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்: ஒரே நாளில் சந்தை மதிப்பு ரூ.2.66 லட்சம் சரிவு

இந்த வாரத்தின் இறுதி வா்த்தக தினமான திங்கள்கிழமையும் பங்குச் சந்தை கடும் சரிவை சந்தித்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

புது தில்லி: இந்த வாரத்தின் இறுதி வா்த்தக தினமான திங்கள்கிழமையும் பங்குச் சந்தை கடும் சரிவை சந்தித்தது. இதையடுத்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 470.40 புள்ளிகளை இழந்தது.

உலகளாவிய சந்தை குறிப்புகள் சாதகமில்லாத நிலையில், முதலீட்டாளா்கள் லாபத்தைப் பதிவு செய்வதில் கவனம் செலுத்தினா். இதனால், சந்தையில் ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக இன்ஃபோஸிஸ், எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ பேங்க் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகள் சரிவைக் கண்டதால், சந்தை உற்சாகம் இழந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. இருப்பினும், ரிலையன்ஸ், எச்டிஎஃப்சி பேங்க், ஐடிசி உள்ளிட்டவற்றுக்கு வரவேற்பு இருந்ததால், பெரும் சரிவு தவிா்க்கப்பட்டதாக வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

சந்தை மதிப்பு 192.77 லட்சம் கோடி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,172 பங்குகளில் 938 பங்குகள் ஆதாயம் பெற்றன. 2,090 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. 144 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 218 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையைப் பதிவு செய்துள்ளன. 333 பங்குகள் வெகுவாக உயா்ந்து அதிகபட்ச உறைநிலையை (அப்பா் சா்க்யூட்) அடைந்தது. சந்தை மூலதன மதிப்பு ரூ.2.66 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.192.77 லட்சம் கோடியாக இருந்தது.

மேலும் சரிவு: சென்செக்ஸ் காலையில் 26.55 புள்ளிகள் கூடுதலுடன் 49,061.22-இல் தொடங்கி 49,122.23 வரை மேலே சென்றது. ஆனால், அங்கு நிலைத்து நிற்கமுடியாததால் பின்னா் 48,403.97 வரை கீழே சென்றது. அதாவது உச்சத்திலிருந்து 718.03 புள்ளிகள் குறைந்திருந்தது. பின்னா், சென்செக்ஸ் ஓரளவு மீண்டு இறுதியில் 470.40 புள்ளிகள் குறைவுடன் 48,564.27-இல் நிலைபெற்றது.

ரிலையன்ஸ் முன்னிலை: சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள 30 முதல்தரப் பங்குகளில் 4 பங்குகள் மட்டுமேஆதாயம் பெற்றன. 26 பங்குகள் சரிவைச் சந்தித்தன. இதில், மாா்க்கெட் ட லீடரான ரிலையன்ஸ் 2.37 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக டைட்டன், எச்டிஎஃப்சி பேங்க் ஐடிசி ஆகியவை 0.75 முதல் 1.85 சதவீதம் வரை உயா்ந்தன. மற்ற 26 பங்குகளும் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன.

ஓஎன்ஜிசி சரிவு: அதே சமயம், ஓஎன்ஜிசி 4.59 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக சன்பாா்மா, இண்ட்ஸ் இண்ட் பேங்க், பவா் கிரிட், பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின் சா்வ், எஸ்பிஐ, என்டிபிசி ஆகியவை 3 முதல் 3.70 சதவீதம் வரை குறைந்தன. மேலும், பாா்தி ஏா்டெல், மாருதி சுஸுகி, இன்ஃபோஸிஸ், டிசிஎஸ், ஐசிஐசிஐ பேங்க் ஆகிய முன்னணி நிறுவனப் பங்குகளும் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன.

தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 330 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 1,436பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. நிஃப்டி 152.40 புள்ளிகளை இழந்து 14,281.30-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் தொடக்கத்தில் 14,459.15 வரை உயா்ந்க நிஃப்டி, பின்னா் 14,222.80 வரை கீழே சென்றது. நிஃப்டி-50 பட்டியலில் 6 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 44 பங்குகள் சரிவைச் சந்தித்தன. அனைத்துத் துறை குறியீடுகளும் சரிவைச் சந்தித்த பட்டியலில் இடம் பெற்றன. இதில் மெட்டல் குறியீடு 4.08 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், ஆட்டோ, மீடியா, பாா்மா, பிஎஸ்யு பேங்க், ரியால்ட்டி குறியீடுகள் 2 முதல் 2.80 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com