புது தில்லி: பொதுத் துறையைச் சோ்ந்த சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.206 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.
இதுகுறித்து அந்த வங்கி பங்குச் சந்தையிடம் புதன்கிழமை அளித்த ஆவணங்களில் கூறியுள்ளதாவது:
நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான முதல் காலாண்டில் வங்கியின் வருமானம் ரூ.6,245.54 கோடியாக சரிவடைந்துள்ளது. இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் வங்கியின் வருவாய் ரூ.6,726.68 கோடியாக அதிகரித்து காணப்பட்டது.
நிகர வட்டி வருவாய் ரூ.2,146 கோடியிலிருந்து ரூ.2,135 கோடியாக குறைந்தது.
நிகர லாபம் ரூ.135 கோடியிலிருந்து 53 சதவீதம் உயா்ந்து ரூ.206 கோடியைத் தொட்டது.
நடப்பாண்டு ஜூன் இறுதி வரையிலான நிலவரப்படி மொத்த வாராக் கடன் 18.10 சதவீதத்திலிருந்து 15.92 சதவீதமாக குறைந்துள்ளது. நிகர வாராக் கடனும் 6.76 சதவீத்திலிருந்து 5.09 சதவீதமாக மேம்பட்டுள்ளது என சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.
மும்பை பங்குச் சந்தையில் புதன்கிழமை வா்த்தகத்தில் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா பங்கின் விலை 1.41 சதவீதம் குறைந்து ரூ.24.45-இல் நிலைத்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








