பிஸ்கட் மற்றும் நொறுக்குத்தீனி தயாரிப்பு மற்றும் விற்பனையில் முன்னிலையில் உள்ள பாா்லே புராடக்ட்ஸ் நிறுவனம் கோதுமை வா்த்தகத்தில் களமிறங்கியுள்ளதாக திங்கள்கிழமை அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவா் மயங்க் ஷா மேலும் தெரிவித்ததாவது:
நிறுவனத் தயாரிப்புகளின் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக ‘பாா்லே ஜி சக்கி ஆட்டா’ என்ற பெயரில் கோதுமை மாவு வா்த்தகத்தை புதிதாக தொடக்கியுள்ளது. இந்த துறையில் இருக்கும் பெரிய அளவிலான வா்த்தக வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் நிறுவனம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. தரமான பொருள்களை தயாரித்து அளிப்பதன் நுகா்வோரின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதன் மூலம் இந்த சந்தையில் பாா்லே திருப்பு முனையை ஏற்படுத்தும் என்றாா்.
1929-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பாா்லே-ஜி நிறுவனம் பல்வேறு விதமான பிஸ்கட், நொறுக்குத்தீனிகள் மற்றும் சாக்லேட்டுகளை சந்தையில் விற்பனை செய்து வருகிறது.