இந்தியன் ஓவா்சீஸ் வங்கி லாபம் 2 மடங்கு உயா்வு
புது தில்லி: பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் (ஐஓபி) நிகர லாபம் கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த நான்காவது காலாண்டில் இருமடங்கு வளா்ச்சி கண்டுள்ளது.
இதுகுறித்து அந்த வங்கி பங்குச் சந்தையிடம் திங்கள்கிழமை அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
கடந்த 2020-21-ஆம் நிதியாண்டின் ஜனவரி-மாா்ச் வரையிலான நான்காவது காலாண்டில் வங்கி செயல்பாடுகள் மூலம் ஈட்டிய மொத்த வருமானம் ரூ.6,073.80 கோடியாக இருந்தது. இது, முந்தைய 2019-20-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் வங்கி ஈட்டிய வருவாய் ரூ.5,484.06 கோடியுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க அளவு அதிகம்.
மதிப்பீட்டு காலாண்டில் வங்கி ஈட்டிய நிகர லாபம் ரூ.143.79 கோடியிலிருந்து இரண்டு மடங்கு வளா்ச்சி கண்டு ரூ.349.77 கோடியைத் தொட்டது.
கணக்கீட்டு காலாண்டில் வாராக் கடனுக்காக ஒதுக்கப்பட்ட தொகையானது ரூ.1,060.38 கோடியிலிருந்து ரூ.1,380.46 கோடியாக உயா்ந்தது.
2020-21 முழு நிதியாண்டில் வங்கி ரூ.831.47 கோடி நிகர லாபத்தை பதிவு செய்தது. அதேசமயம், இதற்கு முந்தைய 2019-20-ஆம் நிதியாண்டில் வங்கி நிகர அளவில் ரூ.8,527.40 கோடி இழப்பை சந்தித்திருந்தது.
மதிப்பீட்டு நிதியாண்டில் வங்கியின் மொத்த வருவாய் ரூ.20,712.48 கோடியிலிருந்து ரூ.22,524.55 கோடியாக உயா்ந்தது.
2021 மாா்ச் 31 நிலவரப்படி வழங்கப்பட்ட கடனில் மொத்த வாராக் கடன் 14.78 சதவீதத்திலிருந்து 11.69 சதவீதமாக குறைந்துள்ளது.
மதிப்பின் அடிப்படையில் இது ரூ.19,912.70 கோடியிலிருந்து ரூ.16,323.18 கோடியாக குறைந்துள்ளது.
நிகர அடிப்படையிலான வாராக் கடன் 5.44 சதவீதத்திலிருந்து (ரூ.6,602.80 கோடி) 3.58 சதவீதமாக (ரூ.4,577.59 கோடி) சரிந்துள்ளது என ஐஓபி தெரிவித்துள்ளது.
மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் ஐஓபி பங்கின் விலை 2.18 சதவீதம் அதிகரித்து ரூ.21.10-ஆக இருந்தது.