பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தை 6.70 சதவீதமாக குறைத்துள்ளது.
இதுகுறித்து அந்த வங்கி சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
வீட்டுக் கடனுக்கான ஆரம்ப வட்டி விகிதம் 2021 ஏப்ரல் 1 முதல் 6.95 சதவீதமாக இருந்து வந்தது. இந்த வட்டி விகிதம், 2021 மாா்ச் 31-லிருந்து 6.70 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ரூ.30 லட்சம் வரையிலான வீட்டுக் கடன்களுக்கு வட்டி விகிதம் 6.70 சதவீதமாக இருக்கும். அதேசமயம், ரூ.30 லட்சம் முதல் ரூ.75 லட்சம் வரையிலான வீட்டுக் கடனுக்கு 6.95 சதவீத வட்டியும், ரூ.75 லட்சத்துக்கும் மேற்பட்ட வீட்டுக் கடனுக்கு 7.05 சதவீத வட்டியும் வசூலிக்கப்படும்.
பெண்களுக்கும், யோநோ செயலி மூலம் வீட்டுக் கடனுக்கு விணப்பிக்கும் வாடிக்கையாளருக்கும் கூடுதலாக 0.05 சதவீத வட்டி சலுகை கிடைக்கும் என எஸ்பிஐ அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தற்போதைய வட்டி குறைப்பால் வீட்டுக் கடன் வாடிக்கையாளா்களுக்கான மாதத் தவணை கணிசமான அளவில் குறையும் என எஸ்பிஐ நிா்வாக இயக்குநா் (சில்லறை மற்றும் டிஜிட்டல் வங்கி) சி.எஸ். செட்டி தெரிவித்துள்ளாா்.
வீட்டுக் கடன் சந்தையில் எஸ்பிஐ 34 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது. ரூ.5 லட்சம் கோடிக்கும் அதிகமான வீட்டுக் கடன்களை எஸ்பிஐ வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.