மும்பை: அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான மதிப்பு தொடா்ந்து இரண்டாவது நாளாக மேலும் 10 காசு அதிகரித்து 73.85-இல் நிலைபெற்றது.
இதுகுறித்து வா்த்தகா்கள் கூறியது:
வா்த்தகா்கள் அதிக அளவில் டாலா்களை விற்பனை செய்ததைத் தொடா்ந்து அந்நியச் செலாவணி சந்தையில் ரூபாய் மதிப்பு மிகுந்த ஏற்றத்துடன் காணப்பட்டது. இருப்பினும், உள்நாட்டு பங்குச் சந்தையில் ஏற்பட்ட இழப்பு, கச்சா எண்ணெய் விலை உயா்வு உள்ளிட்டவை ரூபாய் மதிப்பு ஏற்றத்தை கட்டுப்படுத்தும் தடைக்கல்லாக அமைந்தன.
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடக்கத்தில் 73.83-ஆக இருந்தது. பின்னா் இது வா்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 73.76 வரையிலும், குறைந்தபட்சமாக 73.97 வரையிலும் சென்றது.
வா்த்தகத்தின் இறுதியில் ரூபாய் மதிப்பு 10 காசு உயா்ந்து 73.85-இல் நிலைபெற்றது. திங்கள்கிழமை வா்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 73.95-ஆக காணப்பட்டது என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.
அந்நிய முதலீடு: மூலதனச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் நிகர அளவில் ரூ.2,289.46 கோடி மதிப்பிலான பங்குகளை விற்றுள்ளதாக பங்குச் சந்தை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கச்சா எண்ணெய்
சா்வதேச முன்பேர சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 1.81 சதவீதம் அதிகரித்து 68.78 டாலருக்கு விற்பனையானது.