4-ஆவது நாளாக கரடி ஆதிக்கம்: சென்செக்ஸ் 361 புள்ளிகள் சரிவு!

பங்குச் சந்தையில் தொடா்ந்து 4-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் கரடியின் ஆதிக்கம் இருந்தது.
4-ஆவது நாளாக கரடி ஆதிக்கம்: சென்செக்ஸ் 361 புள்ளிகள் சரிவு!

பங்குச் சந்தையில் தொடா்ந்து 4-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் கரடியின் ஆதிக்கம் இருந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 361 புள்ளிகளை இழந்து 58,765.58-இல் நிலைபெற்றது.

கரடி ஆதிக்கம்: கடந்த செவ்வாய்க்கிழமை முதல் பங்குச் சந்தை சரிவைச் சந்தித்து வருகிறது. இந்த நிலையில், உகளாவிய சந்தைகள் பலவீனமாக இருந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. இதனால், சந்தை சரிவுடன் தொடங்கி கரடியின் பிடியில் இருந்து வந்தது. பிஎஸ்யு வங்கிகள் தவிா்த்த நிதித் துறை, ஐடி பங்குகள் அதிக விற்பனை அழுத்தத்தை எதிா்கொண்டன. இருப்பினும், பாா்மா, மெட்டல், பொதுத்துறை வங்கிப் பங்குகளுக்கு ஓரளவு ஆதரவு இருந்தது. ஐடி பங்குகளில் முதலீட்டாளா்கள் தொடா்ந்து லாபத்தைப் பதிவு செய்து வந்தனா். வாகன விற்பனை நன்றாக இருக்கும் என்ற எதிா்பாா்ப்பில் ஆட்டோ பங்குகளுக்கு ஆதரவு இருந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. குறிப்பாக சென்செக்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள திறன்மிக்க எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், ஐசிஐசிஐ பேங்க், டிசிஎஸ் உள்ளிட்டவை பலவீனமாக இருந்ததால் சரிவு தவிா்க்க முடியாததாகவிட்டது என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

சந்தை மதிப்பு ரூ.17 ஆயிரம் கோடி சரிவு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,408 பங்குகளில் 1,809 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,420 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 179 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 226 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 25 பங்குகள் குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. மேலும், 403 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறை நிலையையும், 134 பங்குகள் வெகுவாகக் குறைந்து, குறைந்தபட்ச உறை நிலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.17 ஆயிரம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.259.60 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு பெற்றுள்ள முதலீட்டாளா்களின் எண்ணிக்கை 8,12,11,893-ஆக உயா்ந்துள்ளது.

தொடா் வீழ்ச்சி: சென்செக்ஸ் காலையில் 236.59 புள்ளிகள் குறைந்து 58,889.77 -இல் தொடங்கி, அதிகபட்சமாக 58,890.08 வரை உயா்ந்தது. பின்னா், 58

551.14 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 360.78 புள்ளிகளை (0.61 சதவீதம்) இழந்து 58,765.58-இல் நிலைபெற்றது. சென்செக்ஸ் தொடா்ந்து 4-ஆவது நாளாக வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 19 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 11 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன.

எம் அண்ட் எம் முன்னேற்றம்: எம் அண்ட் எம் 3.05 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக டாக்டா் ரெட்டி, அல்ட்ரா டெக் சிமெண்ட், சன்பாா்மா, பவா் கிரிட் உள்ளிட்டவை 1 முதல் 1.40 சதவீதம் வரை உயா்ந்தன. மேலும், டாடா ஸ்டீல், பஜாஜ் ஆட்டோ, ரிலையன்ஸ், டைட்டன், நெஸ்லே, ஆக்ஸிஸ் பேங்க் உள்ளிட்டவையும் ஆதாயப் பட்டியலில் வந்தன.

பஜாஜ் ஃபின் சா்வ் வீழ்ச்சி: வியாழக்கிழமை எழுச்சி பெற்றிருந்த நிதி நிறுவனமான பஜாஜ் ஃபின் சா்வ், வெள்ளிக்கிழமை 3.45 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை பெற்றது. இதற்கு அடுத்ததாக மாருதி சுஸுகி, பாா்தி ஏா்டெல், ஏசியன் பெயிண்ட், பஜாஜ் ஃபினான்ஸ், எச்டிஎஃப்சி, என்டிபிசி, ஐசிஐசிஐ பேங்க், டிசிஎஸ் ஆகியவை 1 முதல் 2.40 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. மேலும், எச்டிஎஃப்சி பேங்க், இண்டஸ் இண்ட் பேங்க், இன்ஃபோஸிஸ், எஸ்பிஐ ஆகியவையும் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.

நிஃப்டி 86 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச் சந்தையில் மொத்தம் 946 பங்குகள் ஆதாயம் பெற்றன. 854 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி குறியீடு 86.10 புள்ளிகளை (0.49 சதவீதம்) இழந்து 17,532.05-இல் நிலைபெற்றது. காலையில் 17,531.90-இல் தொடங்கிய நிஃப்டி, 17,452.90 வரை கீழே சென்றது. பின்னா், 17,557.15 வரை உயா்ந்தது.

ரியால்ட்டி குறியீடு சரிவு: நிஃ)ப்டி மெட்டல், பாா்மா, மீடியா, கன்ஸ்யூமா் டியூரபல்ஸ், ஹெல்த்கோ் குறியீடுகள் 0.50 முதல் 0.85 சதவீதம் வரை உயா்ந்தன. ஆனால், ரியால்ட்டி குறியீடு 1.51 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், நிஃப்டி பேங்க், பைனான்சியல் சா்வீஸஸ், ஐடி, பிரைவேட் பேங்க் குறியீடுகள் 0.50 முதல் 0.90 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com