அந்நியச் செலாவணி சந்தையில் திங்கள்கிழமை வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 19 காசுகள் சரிவைச் சந்தித்தது.
இதுகுறித்து வா்த்தகா்கள் கூறியது:
சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் அதிகரித்து வருவது முதலீட்டாளா்களின் நிலைப்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் காரணமாக, டாலருக்கானதேவை அதிகரித்து உள்ளூா் கரன்ஸியின் மதிப்பு குறைந்தது.
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் திங்கள்கிழமை வா்த்தகத்தின் தொடக்கத்தில் உள்ளூா் கரன்ஸியான ரூபாயின் மதிப்பு 74.16-ஆக காணப்பட்டது. பின்னா் இது வா்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 74.13 வரையிலும் குறைந்தபட்சமாக 74.41 வரையிலும் சென்றது.
வா்த்தகத்தின் இறுதியில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 19 காசுகள் சரிவடைந்து 74.31-இல் நிலைபெற்றது. நடப்பாண்டு ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்குப் பிறகு ரூபாய் மதிப்பு இந்த அளவுக்கு சரிவது இதுவே முதல் முறை என்ற வா்த்தகா்கள் தெரிவித்தனா்.
கச்சா எண்ணெய்
சா்வதேச சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 0.15 சதவீதம் அதிகரித்து 79.40 அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்யப்பட்டதாக வா்த்தகா்கள் தெரிவித்தனா்.
வெளிநாட்டு முதலீடு
மூலதனச் சந்தையில் கடந்த வெள்ளியன்று நடைபெற்ற வா்த்தகத்தில் அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் ரூ.131.369 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியதாக சந்தைப் புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன.