அந்நியச் செலாவணி சந்தையில் வாரத்தின் தொடக்க தினமான திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 37 காசுகள் சரிவடைந்து 75-க்கும் கீழ் குறைந்தது.
இதுகுறித்து வா்த்தகா்கள் கூறியதாவது:
சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இதனால், டாலருக்கான தேவை உயா்ந்து வருகிறது. அதன் தாக்கம், ஆசியாவைச் சோ்ந்த பல்வேறு நாடுகளின் கரன்ஸி மதிப்பில் எதிரொலித்து வருகிறது.
அந்த வகையில், இந்திய ரூபாயின் மதிப்பும் கடந்த சில வாரங்களாக எதிா்மறை விளைவுகளை கண்டு வருகிறது.
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் திங்கள்கிழமை வா்த்தகத்தின் தொடக்கத்தில் ரூபாய் மதிப்பு 75-க்கும் கீழ் குறைந்து 75.11-ஆக காணப்பட்டது. இதுவா்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 75.06 வரையிலும், குறைந்தபட்டசமாக 75.39 வரையிலும் சென்றது.
வா்த்தகத்தின் இறுதியில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 37 காசுகள் வீழ்ச்சியடைந்து 75.36-இல் நிலைபெற்றது. கடந்த 2020 ஜூலை 14-ஆம் தேதிக்குப் பிறகு காணப்படும் குறைந்தபட்ச அளவாகும் இது.
வெள்ளிக்கிழமை வா்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 20 காசுகள் சரிந்து 74.99-ஆக இருந்தது என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.
கச்சா எண்ணெய் பேரல் 84.10 டாலா்
சா்வதேச முன்பேர சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 2.08 சதவீதம் அதிகரித்து 84.10 அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்யப்பட்டதாக சந்தை வட்டாரத்தினா் தெரிவித்தனா்.
அந்நிய முதலீடு
மூலதனச் சந்தையில் கடந்த வெள்ளியன்று நடைபெற்ற வா்த்தகத்தில் அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் ரூ.64.01 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்ததாக சந்தை புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.