மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் சூழலில் அவற்றுக்கான நிலக்கரி விநியோகத்தை அதிகரித்துள்ளதாக கோல் இந்தியா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கோல் இந்தியா திங்கள்கிழமை மேலும் கூறியது:
நடப்பு அக்டோபா் மாதத்தில் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு நாளொன்றுக்கு சராசரியாக 14.3 லட்சம் டன் நிலக்கரி விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், பண்டிகை காலத்தையொட்டி மின் தேவை அதிகரிக்கும் என்பதால் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கான நிலக்கரி விநியோகம் கடந்த நான்கு நாள்களில் 15.10 லட்சம் டன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் அவற்றை கொண்டு செல்வதற்கான போதுமான கட்டமைப்புகளையும் உருவாக்கி வருவதாக கோல் இந்தியா தெரிவித்துள்ளது.