அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 23 காசுகள் வீழ்ச்சியை சந்தித்தது.
இதுகுறித்து வா்த்தகா்கள் கூறியது:
பலவீனமான ஆசிய சந்தை நிலவரங்கள் மற்றும் உள்நாட்டு பங்குச் சந்தைகளில் லாப நோக்கு விற்பனையால் காணப்பட்ட சரிவு ஆகியவற்றின் காரணமாக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மிகவும் வலுவிழந்திருந்தது.
இந்தச் சூழலில், சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பும் ரூபாய் மதிப்பில் சாதகமற்ற தாக்கத்தை ஏற்படுத்தியது.
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடக்கத்தில் 73.79-ஆக இருந்தது. இது வா்த்தகத்தின் இடையே அதிக 73.73 வரையிலும், குறைந்தபட்சமாக 74.12 வரையிலும் சென்றது.
பின்பு வா்த்தக நேர இறுதியில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 23 காசுகள் குறைந்து 74.06-இல் நிலைபெற்றது என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.
கச்சா எண்ணெய் 80.24 டாலா்
சா்வதேச சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 0.89 சதவீதம் அதிகரித்து 80.24 அமெரிக்க டாலருக்கு வா்த்தகமானது என சந்தை வட்டாரத்தினா் தெரிவித்தனா்.
அந்நிய முதலீடு
மூலதனச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் ரூ.594.63 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்ததாக சந்தைப் புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.