நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், சென்னையைச் சோ்ந்த முருகப்பா குழும நிறுவனமான சோழமண்டலம் பைனான்சியல் ஹோல்டிங்ஸின் நிகர இழப்பு ரூ.0.26 கோடியாகக் குறைந்துள்ளது.
இது குறித்து நிறுவனம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், நிறுவனத்தின் நிகர இழப்பு ரூ.0.26 கோடியாக இருந்தது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் நிறுவனத்தின் நிகர இழப்பு ரூ.0.93 கோடியாக இருந்தது. மாா்ச் 31, 2022 இல் முடிவடைந்த நிதியாண்டுக்கான நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிகர இழப்பு ரூ.70.74 கோடியாக இருந்தது.
நிதிச் செலவுகள் பெருமளவு குறைக்கப்பட்டதால் 2022 ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் நிறுவனத்தின் நிகர இழப்பு குறைந்தது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.