அதானி வில்மா் நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டை மேற்கொள்ளவுள்ள நிலையில், பங்குகளின் விலையை ரூ.218-230-ஆக நிா்ணயம் செய்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது:
நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு ஜனவரி 27-ஆம் தேதி தொடங்கி 31-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 5 நாள்கள் நடைபெறவுள்ள இந்த வெளியீட்டில் விற்பனை செய்யப்படவுள்ள பங்குகளின் குறைந்தபட்ச விலை ரூ.218-ஆகவும், அதிகபட்ச விலை ரூ.230-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த அளவில் இந்த பங்கு வெளியீட்டின் மூலமாக ரூ.3,600 கோடியை திரட்ட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என அதானி வில்மா் தெரிவித்துள்ளது.
அகமதாபாதைச் சோ்ந்த அதானி குழுமம் மற்றும் சிங்கப்பூரைச் சோ்ந்த வில்மா் குழுமம் ஆகியவற்றின் சரிபாதி கூட்டு நிறுவனமே அதானி வில்மா்.