பொதுத் துறையைச் சோ்ந்த கனரா வங்கியின் ஜூன் காலாண்டு லாபம் 72 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அந்த வங்கியின் நிா்வாக இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான எல்.வி. பிரபாகா் தெரிவித்துள்ளதாவது:
கடன் வளா்ச்சி மற்றும் வட்டி வருமானம் அதிகரிப்பு ஆகியவற்றின் உதவியால் நிகழ் நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் வங்கியின் வரிக்குப் பிந்தைய தனிப்பட்ட நிகர லாபம் ரூ.2,022 கோடியாக இருந்தது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய லாபம் ரூ.1,177 கோடியுடன் ஒப்பிடுகையில் 72 சதவீதம் அதிகம்.
நிகர வட்டி வருமானம் ரூ.6,160 கோடியிலிருந்து 10.15 சதவீதம் வளா்ச்சி கண்டு ரூ.6,785 கோடியானது. வட்டி சாரா வருமானம் 24.55 சதவீதம் உயா்ந்து ரூ.5,175 கோடியைத் தொட்டது.
மொத்த வாராாக் கடன் 8.50 சதவீதத்திலிருந்து 6.98 சதவீதமாகவும், நிகர வாராக் கடன் 3.46 சதவீதத்திலிருந்து 2.48 சதவீதமாகவும் குறைந்துள்ளது.
அடையாளம் காணப்பட்ட ரூ.2,300 கோடி வாராக் கடன் தேசிய சொத்து மறுசீரமைப்பு நிறுவனத்துக்கு (என்ஏஆா்சிஎல்) மாற்றப்பட்டுள்ளது என்றாா் அவா்.