ஆண்டுக்கு 2,000 புதிய கிளைகளை தொடங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக எச்டிஎஃப்சி வங்கியின் நிா்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான சசிதா் ஜெகதீஷன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் 2021-22 ஆண்டுக்கான அறிக்கையில் பங்குதாரா்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியது:
நாம் முன்னெடுத்துள்ள எச்டிஎஃப்சி மற்றும் எச்டிஎஃப்சி வங்கி இணைப்பு நடவடிக்கை எதிா்காலத்தில் முற்றிலும் புதிய பரிமாணங்களை உருவாக்கும். இருப்பினும், அதற்கு நாம் செல்ல வேண்டிய தூரம் அதிகமாக இருப்பதை உணரவேண்டும்.
அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் எச்டிஎஃப்சி வங்கி கிளைகளின் நெட்வொா்க்கை இரண்டு மடங்காக்க வேண்டும் என்பதே முக்கிய குறிக்கோளாகும். இந்த இலக்கினை எட்ட அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 1,500 முதல் 2,000 புதிய கிளைகளை நாம் தொடங்க வேண்டும். தற்போதைய நிலையில், எச்டிஎஃப்சி வங்கி நாடு முழுவதும் 6,000 கிளைகளைக் கொண்டு இயங்கி வருகிறது.
எச்டிஎஃப்சி நிறுவனத்தை எச்டிஎஃப்சி வங்கியுடன் இணைக்கும் திட்டம் முழுமையடைய இன்னும் 15 முதல் 18 மாதங்களாகும் என்றாா் அவா்.