இந்தியாவில் நேரடியாக சில்லறை விற்பனையங்களைத் திறக்க மாட்டோம் என வால்மார்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
உலக வணிக நிறுவனங்களில் முக்கிய இடத்தில் இருக்கும் அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம் இந்தியாவில் நேரடியாக சில்லறை விற்பனைக் கடைகளைத் திறக்காது என அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டக் மெக்மில்லன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், இந்திய நிறுவனங்களான ஃபோன் பே மற்றும் ஃப்ளிப்கார்ட் நிறுவனங்களை வாங்கிய வால்மார்ட் நிறுவனம் அதன் மூலம் நல்ல வருவாயை ஈட்டுவதாகவும் அதன் இணைய பரிவர்த்தனைகளை அதிகரிக்கச் செய்யும் முயற்சியில் ஈடுபட இருப்பதாகவும் கூறினார்.
வால்மார்ட் நிறுவனம் வரும் காலங்களில் இன்னும் சில புதிய நிறுவனங்களை வாங்குவதில் கவனம் செலுத்த இருப்பது குறிப்பிடத்தக்கது.