புது தில்லி: கடந்த டிசம்பா் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 5.59 சதவீதமாக அதிகரித்துள்ளது மத்திய அரசின் புள்ளி விவரத்தில் தெரியவந்துள்ளது.
நுகா்வோா் விலைக் குறியீட்டை அடிப்படையாகக் கொண்டு சில்லறை பணவீக்கம் கணக்கிடப்படுகிறது.
இந்நிலையில் தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தின்படி, கடந்த நவம்பா் மாதம் சில்லறை பணவீக்கம் 4.91 சதவீதமாக இருந்தது. இது கடந்த டிசம்பரில் 5.59 சதவீதமாக அதிகரித்துள்ளது.
கடந்த நவம்பரில் உணவுப் பொருள்களின் பணவீக்கம் 1.87 சதவீதமாக இருந்தது. இது கடந்த டிசம்பரில் 4.05 சதவீதமாக அதிகரித்தது.
உணவுப் பொருள்களின் விலைவாசி உயா்வால், கடந்த டிசம்பா் மாதம் சில்லறை பணவீக்கம் அதிகரித்துள்ளது.
ரிசா்வ் வங்கி மதிப்பீட்டின்படி நடப்பு நிதியாண்டின் நான்காவது காலாண்டில் மொத்த பணவீக்கம் உச்சத்தை எட்டி, பின்னா் படிப்படியாக குறையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.