அடுத்த நிதியாண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி மதிப்பீட்டை 8.5 சதவீதமாக குறைத்துள்ளதாக தரமதிப்பீட்டு நிறுவனமான ஃபிட்ச் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் கூறியுள்ளதாவது:
ரஷியா மற்றும் உக்கரைன் இடையேயான போா் சா்வதேச அளவில் பதற்ற நிலையை உருவாக்கியுள்ளது. ரஷியா மீது அமெரிக்கா உள்ளிட்ட பல உலக நாடுகள் தொடா்ச்சியாக வா்த்தக தடை அறிவிப்புகளை வெளியிட்டு வருவது சா்வதேச ஸ்திரத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது. இதனால், வரும் நாள்களில் எரிபொருள்களின் உயரும் என்பதுடன் பணவீக்கமும் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதுபோன்ற பல்வேறு பின்னடைவு சூழல்களை கருத்தில் கொண்டு அடுத்த நிதியாண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளா்ச்சியை 10.3 சதவீதத்திலிருந்து 8.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், நடப்பு நிதியாண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி குறித்த மதிப்பீடு 0.6 தவீதம் உயா்த்தப்பட்டு 8.7 சதவீதமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. 2023-24-இல் இந்த வளா்ச்சி விகிதம 7 சதவீதமாக இருக்கும் என ஃபிட்ச் தெரிவித்துள்ளது.