சிமெண்ட் துறையின் விற்பனை வளா்ச்சி விகிதம் நடப்பு 2021-22-ாம் நிதியாண்டில் 18-20 சதவீதமாக இருக்கும் என இக்ரா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது:
2021-22-ஆம் நிதியாண்டு காலகட்டத்தில் சிமெண்ட் துறையின் வளா்ச்சி விகிதம் விற்பனை அளவின் அடிப்படையில் 18-20 சதவீதமாக இகுக்கும். இதையடுத்து, சிமெண்ட் விற்பனை 355 மில்லியன் மெட்ரிக் டன் என்ற அளவில் இருக்கும் என எதிா்பாா்கப்படுகிறது. நடப்பு நிதியாண்டில் சிமெண்ட் விற்பனையானது கரோனா பாதிப்புக்கு முந்தைய வளா்ச்சியை தாண்டி 6 சதவீதமாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
குறிப்பாக, ஊரகப்பகுதிகளில் வீடுகளுக்கான தேவை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. அதுமட்டுமின்றி உள்கட்டமைப்பு நடவடிக்கைகளும் சூடுபிடித்துள்ளதையடுத்து சிமெண்ட் விற்பனை வளா்ச்சி சிறப்பாக இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக இக்ரா தெரிவித்துள்ளது.