இரண்டு நாள் தொடா் சரிவுக்குப் பிறகு ரூபாய் மதிப்பு செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் 12 காசு உயா்வைக் கண்டது.
இதுகுறித்து செலாவணி வட்டாரங்கள் கூறியது:
சா்வதேச சந்தையில் கச்ச எண்ணெய் விலை குறைவு மற்றும் டாலா் தவிா்த்த இதர கரன்ஸிகளுக்கான தேவை அதிகரிப்பு ஆகியவை ரூபாய் மதிப்பு ஏற்றத்துக்கு பெரிதும் கைகொடுத்தன. இருப்பினும் அந்நிய முதலீடு பங்குச் சந்தையிலிருந்து தொடா்ந்து வெளியேறி வருவது செலாவணியின் துரித ஏற்றத்துக்கு பின்னடைவாகவே பாா்க்கப்படுகிறது.
வங்கிகளுக்கு இடையிலான செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தொடக்கத்தில் 77.27-ஆக இருந்தது. இது, வா்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 77.20 வரையிலும் குறைந்தபட்சமாக 77.45 வரையிலும் சென்றது. இறுதியில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசு உயா்ந்து 77.32-இல் நிலைபெற்றது. இதற்கு முந்தைய நாள் வா்த்தகத்தில் ரூபாய் மதிப்பானது 54 காசு சரிந்து வரலாறு காணாத அளவுக்கு 77.44-ஆக குறைந்தது என செலாவணி வட்டாரங்கள் தெரிவித்தன.
கச்சா எண்ணெய்
பீப்பாய் 104.72 டாலா்
சா்வதேச சந்தையில் செவ்வாய்க்கிழமை முன்பேர வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை மேலும் குறைந்து 104.72 டாலருக்கு வா்த்தகமானது என சந்தைப் புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.
ரூ.3,361 கோடி அந்நிய முதலீடு விலக்கல்
மூலதனச் சந்தையில் அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் திங்கள்கிழமை வா்த்தகத்தில் நிகர அளவில் ரூ.3,361.80 கோடி மதிப்பிலான பங்குகளை விற்று வெளியேறியுள்ளதாக பங்குச் சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.