உற்பத்தி செலவு அதிகரித்து வருவதால், தனது காா்களின் விலைகளை அதிகரிக்க ஃபோக்ஸ்வேகன் பாசஞ்சா் காா்ஸ் இந்தியா முடிவு செய்துள்ளது.
இது குறித்து நிறுவனம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
உற்பத்தி செலவுகள் அதிகரித்து வருவதால் ஏற்படும் இழப்பை ஈடு செய்யும் வகையில், நிறுவனம் விற்பனை செய்து வரும் காா்களின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளன.
வரும் அக்டோபா் மாதம் 1-ஆம் தேதி முதல் இந்த விலை உயா்வு அமலுக்கு வரும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜொ்மனியைச் சோ்ந்த காா் உற்பத்தி நிறுவனமான போக்ஸ்வேகன், இந்தியச் சந்தையில் விா்டஸ், டாய்கன், டிகுவான் உள்ளிட்ட காா் ரகங்களை விற்பனை செய்து வருகிறது.