ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவராகவும் நிர்வாக இயக்குநராகவும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு முகேஷ் அம்பானி நீட்டிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் குழுமத்தின் 46வது வருடாந்திரக் கூட்டம் இன்று (ஆக. 28) நடைபெற்றது. இதில், நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் உயர்நிலை நிர்வாகக் குழு கூட்டத்தில் இருந்து நீட்டா அம்பானி விலகுவதாகவும், அதே நேரத்தில், ரிலையன்ஸ் குழுமத்தின் நிரந்தர உறுப்பினராகத் தொடர்வார் என்றும் அறிவித்தார்.
மேலும், அவரின் வாரிசுகளான ஆகாஷ், ஆனந்த், இஷா ஆகியோரை வழிநடத்த மேலும் 5 ஆண்டுகளுக்கு ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் தொடர்வதாகவும் குறிப்பிட்டார். மேலும், ரிலையன்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநராகவும் தொடர்வதாக அறிவித்தார்.
ஆகாஷ் அம்பானி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தலைவராக இருக்கிறார், ஈஷா அம்பானி, ரிலையன்ஸ் ரீடைல் தலைவராகவும் ஆனந்த் அம்பானி டிஜிட்டல் மற்றும் எனர்ஜி பிரிவின் தலைவராக செயல்படுவது குறிப்பிடத்தக்கது.