கெயில் நிறுவனத்திடமிருந்து ரூ.52 கோடிக்கான ஆர்டரை பெற்ற என்இசிசி நிறுவனம்!

லாஜிஸ்டிக்ஸ் நிறுவனமான (என்.இ.சி.சி) பாலிமர் கொண்டு செல்வதற்காக அரசுக்கு சொந்தமான கெயில் (இந்தியா) லிமிடெட் நிறுவனத்திடமிருந்து ரூ.52.48 கோடி மதிப்புள்ள ஆர்டரைப் பெற்றுள்ளது என்று தெரிவித்தது.
கெயில் நிறுவனத்திடமிருந்து ரூ.52 கோடிக்கான ஆர்டரை பெற்ற என்இசிசி நிறுவனம்!

புதுதில்லி: லாஜிஸ்டிக்ஸ் நிறுவனமான நார்த் ஈஸ்டர்ன் கேரிங் கார்ப்பரேஷன் லிமிடெட் (என்.இ.சி.சி) பாலிமர் கொண்டு செல்வதற்காக அரசுக்கு சொந்தமான கெயில் (இந்தியா) லிமிடெட் நிறுவனத்திடமிருந்து ரூ.52.48 கோடி மதிப்புள்ள ஆர்டரைப் பெற்றுள்ளது என்று தெரிவித்தது.

இந்த ஒப்பந்தம் மூன்று ஆண்டு காலத்திற்குள் செயல்படுத்தப்பட வேண்டும் என்று என்.இ.சி.சி தனது ஒழுங்குமுறை தாக்கல் இன்று தெரிவித்தது.

மத்திய பொதுத்துறை நிறுவனமான கெயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்திடமிருந்து ரூ.52.48 கோடி மதிப்பிலான பாலிமரை, ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு 3 ஆண்டுகளுக்கு எடுத்து செல்ல ஒப்புந்த அடிப்படையில், ஒப்புதல் கடிதத்தை பெற்றுள்ளது.

புதுதில்லியை தளமாகக் கொண்ட என்.இ.சி.சி இந்தியா முன்னணி சரக்கு அனுப்பும் நிறுவனங்களில் ஒன்றாகும், இது அண்டை நாடுகளான பூட்டான் மற்றும் நேபாளத்திலும் தனது சேவைகளை வழங்கி வருதிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com