இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடா்பு நிறுவனமான ஜியோ தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது.
அதன்படி, ஒராண்டுக்கு ரீசார்ஜ் செய்யும் ரூ. 2999 பிளானை புத்தாண்டுக்குள் ரீசார்ஜ் செய்பவர்கள் 365 நாள் சேவை என்பதை 389 நாள்கள் வரை பயன்படுத்திக்கொள்ளலாம் என ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஓராண்டுக்கான ரீசார்ஜ் சலுகைத் திட்டத்தின்படி ப்ரிபெய்டு (prepaid) வாடிக்கையாளர்கள் 24 நாள்களைக் கூடுதலாகப் பெற உள்ளனர். இந்தத் திட்டத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 2.5 ஜிபி இணையமும், 100 குறுச்செய்தி மற்றும் எண்ணிக்கையில்லா அழைப்புகளை மேற்கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இதனுடன், ஜியோ டிவி, ஜியோ ஓடிடி ஆகியவையும் இலவசமாகப் பார்க்கலாமாம்!