முன்னணி தொலைத் தொடா்பு நிறுவனங்களில் ஒன்றான பாா்தி ஏா்டெல்லின் மொத்த வருவாய் கடந்த டிசம்பா் காலாண்டில் 20 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த டிசம்பா் மாதத்துடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.1,588 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 91.5 சதவீதம் அதிகமாகும்.
நிறுவனத்தின் மொத்த வருவாய் மதிப்பீட்டு மாதத்தில் ரூ.35,804 கோடியாக உள்ளது. 2021-ஆம் ஆண்டின் அக்டோபா்-டிசம்பா் காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் இது 20 சதவீதம் அதிகமாகும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.