பயிற்சி பேராசிரியர் பணியில் டிசிஎஸ் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ராஜேஷ் கோபிநாதன்!

ராஜேஷ் கோபிநாதன் மும்பை ஐஐடி-யில் பயிற்சி பேராசிரியராக பொறுப்பேற்றுள்ளார் என்று அறிவித்துள்ளது.
பயிற்சி பேராசிரியர் பணியில் டிசிஎஸ் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ராஜேஷ் கோபிநாதன்!
Published on
Updated on
1 min read

மும்பை: மும்பை ஐஐடி-யில் பயிற்சி பேராசிரியராக ராஜேஷ் கோபிநாதன் பொறுப்பேற்றுள்ளார் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் நாட்டின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனத்திலிருந்து விலகும் முடிவின் மூலம் அனைவரையும் ஆச்சரியப்படுத்திய ராஜேஷ் கோபிநாதன், ஐஐடி-யில் மொழிபெயர்ப்பு ஆராய்ச்சி மையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதே வேளையில் கடந்த நவம்பர் மாதம், கோபிநாதன் ஆலோசனை நிறுவனமான பி.சி.ஜி.யில் ஊடகம் மற்றும் தொலைத்தொடர்பு துறையில் மூத்த ஆலோசகராக பணியமர்த்தப்பட்டதாக செய்திகள் வெளியானது.

மும்பை ஐ.ஐ.டி அதிகாரப்பூர்வ அறிக்கையில், அறிவுசார் சொத்து ஆய்வகத்திலிருந்து தொழில்துறைக்கு மாறுவதை ஆதரிக்க சமீபத்தில் ஒரு மொழிபெயர்ப்பு ஆராய்ச்சி மையத்தை உருவாக்கியுள்ளதாகவும், இந்த முயற்சிகளை மேலும் விரைவுபடுத்த கோபிநாதனின் நிலைப்பாடு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் ராஜேஷ் கோபிநாதன் பயிற்சி பேராசிரியராக இருப்பார் என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எங்கள் திட்டங்களை வடிவமைப்பதில் தொழில்துறை தலைவர்களின் தீவிர ஈடுபாட்டு எங்களிடம் உள்ளது என்று ஐஐடி-யின் இயக்குநர் சுபாசிஸ் சௌத்ரி தனது சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com