புதுதில்லி: ஒடிசாவில் அலுமினியம் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு 24 மணி நேரமும் மின்சாரம் வழங்க என்.டி.பி.சி. நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
ஒடிசா மாநிலம் அங்குலில் உள்ள நால்கோ நிறுவனத்தின் உருக்காலைத் திறனை விரிவுபடுத்துவதற்காக 24 மணி நேரமும் சுமார் 1,200 மெகாவாட் அல்லது அதற்கு மேற்பட்ட தடையில்லா மின்சாரத்தை வழங்க தேசிய அலுமினியம் கம்பெனி லிமிடெட் (நால்கோ) உடன் என்டிபிசி நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
என்டிபிசியின் மனிதவள இயக்குநர் திலீப் குமார் படேல் மற்றும் நால்கோவின் இயக்குநர் (திட்டம் மற்றும் தொழில்நுட்பம்) ஜகதீஷ் அரோரா ஆகியோர் முன்னிலையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.