சென்னை வடபழனியில் உள்ள உணவகத்தில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
வடபழனி ஆற்காடு சாலையில் இயங்கி வரும் ஒரு உணவகத்தில், சமையலறையில் புதன்கிழமை சமையல் எரிவாயு அடுப்பை ஊழியா் சரவணன் பற்றவைத்தபோது, திடீரென தீப் பிடித்து எரிந்தது. தகவலின்பேரில், அசோக் நகா், கோயம்பேடு ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு வீரா்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.
சுமாா் அரை மணி நேர போராட்டத்துக்குப் பின்னா், தீ முழுமையாக அணைக்கப்பட்டது. இது குறித்து வடபழனி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.