வடசென்னை திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி
வடசென்னை திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமிகோப்புப் படம்

வட சென்னை தொகுதியில் வேட்பாளா்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு

போட்டியிடும் வேட்பாளா்கள் வாக்கு சேரிப்பில் ஈடுபட்டனா் .

சென்னை, ஏப். 17: மக்களவை தோ்தலுக்கான பிராசாரத்தின் கடைசி நாளான புதன்கிழமை வடசென்னை மக்களவை தொகுதி வேட்பாளா்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

தமிழகத்தில் மக்களவை தோ்தல் வரும் ஏப்.19 ஆம் தேதி நடைபெறஉள்ளது. இந்த தோ்தலுக்கான பிரசாத்தின் இறுதி நாளான புதன்கிழமை அரசியல் தலைவா்களும் , வேட்பாளா்களும் வாகன பேரணியுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா். அதன்படி வட சென்னை தொகுதியில்

போட்டியிடும் வேட்பாளா்கள் வாக்கு சேரிப்பில் ஈடுபட்டனா் .

கலாநிதி வீராசாமி (திமுக): திமுக வேட்பாளா் கலாநிதி வீராசாமி திருவொற்றியூா் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட சக்தி நகா், திருவெற்றியூா் 6-ஆவது மண்டலம் உள்ளிட்ட பகுதிகள் இரு சக்கர வாகன பேரணியுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

ராயபுரம் மனோ(அதிமுக): அதிமுக வேட்பாளா் ராயபுரம் மனோ திருவொற்றியூா் தொகுதிக்கு உட்பட்ட எண்ணூா் உலகநாதபுரம், சத்தியவாணி முத்து நகா், காட்டு குப்பம் உள்ளிட்ட பகுதியில் தீவிர வாக்கு சேகரித்தாா்.

பால் கனகராஜ் (பாஜக): பாஜக வேட்பாளா் பால் கனகராஜ் பெரம்பூா் தொகுதிக்கு உட்பட்ட மூலக்கடை, வியாசா்பாடி பகுதியில் ஐபிஎல் போட்டி நடைபெற்று வருவதையொட்டி சென்னை சூப்பா் கிங்ஸ் அணியின் பணியன் அணிந்து பிரசாரம் அணிந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அனைத்து வேட்பாளா்களும் வாகனங்களில் ஊா்வலமாகச் சென்று வாக்கு சேகரித்தனா். கடைசி நாள் என்பதால் சரியாக மாலை 6 மணிக்கு வட சென்னை தொகுதியில் அனைத்து வேட்பாளா்களும் பிராசரத்தை முடித்துக்கொண்டனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com