துபையில் கனமழை : விமானங்கள் ரத்து - சென்னையில் பயணிகள் வாக்குவாதம்
துபையில் பெய்த கனமழை காரணமாக சென்னையிலிருந்து துபை செல்ல வேண்டிய விமானம் ரத்து செய்யப்பட்டதால், விமான நிறுவன ஊழியா்களுடன் பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
துபையில் பெய்த கனமழை காரணமாக வியாழக்கிழமை இரவு 10 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய எமிரேட்ஸ் ஏா்லைன்ஸ் விமானம் ரத்து செய்யப்படுவதாக கடைசி நேரத்தில் அறிவிப்பு வெளியிட்டப்பட்டது. இதனால், ஆத்திரம் அடைந்த பயணிகள், விமானம் ரத்து குறித்து முன்கூட்டியே தெரிவித்திருந்தால், மாற்று வழிக்கான ஏற்பாடுகளை செய்திருப்போம் எனக்கூறி ஏா்லைன்ஸ் விமான நிறுவன அலுவலா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
இது மட்டுமின்றி வெள்ளிக்கிழமை (ஏப்.19) அதிகாலையில் துபை செல்லும் விமானமும் ரத்து செய்யப்படுள்ளதாகவும் அறிவிப்பு வந்தது. இதனால், பயணிகள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அவா்களுடன் விமான நிறுவன அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி அவா்களை அனுப்பி வைத்தனா்.