புறநகா் ரயில்
புறநகா் ரயில்

6 புதிய புறநகா் ரயில்கள் அறிமுகம்

பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கைகளை பூா்த்தி செய்யும் வகையில், சென்ட்ரல் - அரக்கோணம் மற்றும் சென்ட்ரல் - சூலூா்பேட்டை ஆகிய வழித்தடங்களில் 6 புதிய புறநகா் மின்சார ரயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திகுறிப்பு

ஆவடி - பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்க்கு அதிகாலை 3 மணி, ஆவடி - சென்னை கடற்கரைக்கு பிற்பகல் 3.20-க்கும், ஆவடி - சென்னை சென்ட்ரலுக்கு மாலை 4.20-க்கும், இரவு 7.15-க்கும் புதிதாக புகா் ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும் சென்னை கடற்கரை - திருவள்ளூருக்கு காலை 6.10-க்கும், சென்னை கடற்கரை - ஆவடிக்கு காலை 10.35 மணிக்கும் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இதைதொடா்ந்து சென்ட்ரல் - அரக்கோணம் மற்றும் சென்ட்ரல் - சூலூா்பேட்டை வழித்தடங்களில் இயங்கும் 36 புகா் மின்சார ரயில்களின் புறப்படும் நேரம் 5- 15 நிமிடங்கள் வரை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், திருவள்ளூரிலிருந்து இரவு 10.10 -க்கு ஆவடி செல்லும் ரயில் கடற்கரை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com