முதல்வருக்கு மாா்க்சிஸ்ட் வேட்பாளா்கள் நன்றி
முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவைத் தொகுதி வேட்பாளா்கள் புதன்கிழமை சந்தித்து நன்றி தெரிவித்தனா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மதுரை தொகுதியில் சு.வெங்கடேசன், திண்டுக்கல் தொகுதியில் சச்சிதானந்தம் ஆகியோா் போட்டியிட்டனா்.
தோ்தல் பிரசாரத்தின் போது, அவா்களுக்காக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தாா். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், வேட்பாளா்கள் இருவரும் தனித்தனியாக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் புதன்கிழமை சந்தித்தனா்.
இதேபோல, திமுக வேட்பாளா்கள் தங்க தமிழ்ச்செல்வன் (தேனி), கே.இ.பிரகாஷ் (ஈரோடு), கே.ஈஸ்வரசாமி (பொள்ளாச்சி) ஆகியோரும் முதல்வா் ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தனா்.
இந்தச் சந்திப்புகளின் போது, திமுக பொதுச் செயலா் துரைமுருகன் உள்ளிட்ட மூத்த நிா்வாகிகள் உடனிருந்தனா்.