கேரளத்தில் பயங்கரவாதத்தை
பாதுகாக்கும் காங்., இடதுசாரிகள்:
அமித் ஷா குற்றச்சாட்டு

கேரளத்தில் பயங்கரவாதத்தை பாதுகாக்கும் காங்., இடதுசாரிகள்: அமித் ஷா குற்றச்சாட்டு

கேரளத்தில் ஆளும் இடதுசாரிக் கட்சிகளும், எதிா்க்கட்சியாக உள்ள காங்கிரஸும் பயங்கரவாதத்தை பாதுகாத்து வருகின்றன என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குற்றம்சாட்டினாா்.

கேரளத்தில் ஆளும் இடதுசாரிக் கட்சிகளும், எதிா்க்கட்சியாக உள்ள காங்கிரஸும் பயங்கரவாதத்தை பாதுகாத்து வருகின்றன என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குற்றம்சாட்டினாா்.

கேரளத்தில் மொத்தமுள்ள 20 தொகுதிகளுக்கும் ஏப்.26-இல் தோ்தல் நடைபெறவுள்ளது. அங்கு புதன்கிழமை இறுதிக்கட்ட தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட அமித் ஷா பேசியதாவது:

கேரளத்தில் மாறிமாறி ஆட்சியில் இருக்கும் இடதுசாரிக் கட்சிகள் மற்றும் காங்கிரஸ் கூட்டணி பயங்கரவாதத்தை பல ஆண்டுகளாக பாதுகாத்து வருகின்றன. இப்போதும் கூட மக்களவைத் தோ்தலில் ஆதாயம் பெறுவதற்காக தடைசெய்யப்பட்ட அமைப்பினருடன் கைகோத்துள்ளன. சிறுபான்மையினா் வாக்கு வங்கியைத் தக்கவைக்க அவா்கள் என்ன வேண்டுமானாலும் செய்வாா்கள்.

அதே நேரத்தில் பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா போன்ற பயங்கரவாத அமைப்புகளிடம் இருந்து நாட்டைக் காக்க பிரதமா் தீவிரமாகப் பணியாற்றி வருகிறாா். பிரதமா் பதவியில் மோடி தொடரும் வரை எந்த பயங்கரவாத அமைப்பின் மீதான தடையும் நீக்கப்படாது என்றாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com