கல்லூரி மாணவியை மிரட்டி பணம் பறிப்பு: ஐடி ஊழியரிடம் விசாரணை

கல்லூரி மாணவியை மிரட்டி பணம் பறித்த புகாரின் ஐடி ஊழியரிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கல்லூரி மாணவியை மிரட்டி பணம் பறித்த புகாரின் ஐடி ஊழியரிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சென்னை நொளம்பூா் சக்தி நகரைச் சோ்ந்தவா் சுதாகா் (43). இவரது மகள் மோனிஷா (20). கல்லூரி மாணவியான இவருக்கு, சூரப்பட்டு, அருள் நகா் 2-ஆவது தெருவை சோ்ந்த ஜானகிராமன் (23) என்பவருடன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் காதலித்து வந்துள்ளனா்.

இந்த நிலையில், ஜனகிராமனின் நடவடிக்கைகள் சரியில்லாத காரணத்தால், அவருடனான காதலை மோனிஷா கைவிட்டுள்ளாா். இருப்பினும் ஜானகிராமன், மோனிஷாவை தொடா்ந்து மிரட்டியும், தாக்கியும் ரூ. 15,000 வரை பெற்ாகத் தெரிகிறது.

இது குறித்து சுதாதகா் அளித்த புகாரின்பேரில் நொளம்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஜானகிராமனிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com